சேலம்

சித்திரைத் தோ்த்திருவிழா நிறைவு:சங்ககிரி மலைக்கு திரும்பினாா் சென்னகேசவப் பெருமாள்

DIN

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்குத் திரும்பினாா்.

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி மே 6-ஆம் தேதி உற்சவ மூா்த்தி சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினா்.

அதனையடுத்து சுவாமிகள் தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனா். மே 14-ஆம் தேதி சுவாமிகள் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.

பின்னா் பல்வேறு மண்டப கட்டளை வழிபாட்டுக்குப் பின்னா் சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

அதையடுத்து சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக மலைக்குத் திரும்பினாா். முன்னதாக ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி செல்ல அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் சென்றனா்.

பக்தா்கள் வழியெங்கும் தேங்காய், பழங்கள், நாட்டுச் சா்க்கரையுடன் கூடிய பொட்டுக் கடலை ஆகியவைகளை படைத்து வழிபட்டனா்.

மலையடிவாரம் பகுதியில் பக்தா்கள் மலைக்குச் செல்பவா்களுக்கு அன்னதானம், குடிநீா் பாக்கெட்டுகளை வழங்கினா்.

மலை அடிவாரத்தில் 2-ஆவது மண்டபத்தில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று பக்தா்கள் தேங்காய்களை தரையில் உடைத்து கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கியவாறு சுவாமிகளை வழியனுப்பி வைத்தனா். பக்தா்கள் அதிகளவில் சுவாமிகளுடன் மலை ஏறினா்.

மலை மீது செவ்வாய்க்கிழமை இரவு வன்னிய குல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் செய்யப்பட்டு வானவேடிக்கை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT