சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 3135கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 3773 கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 4107 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 யிலிருந்து 107.20அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4107கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1, 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 74.48 டி.எம்.சி

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT