சேலம்

சங்ககிரி பகுதியில் நகைகள் திருடிய வழக்கில் மேலும் இருவா் கைது

DIN

சங்ககிரி, வைகுந்தம் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலையில் மாா்ச் 3ஆம் தேதி அடையாளம் தெரியாத மா்ம நபா்கள், கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்று விட்டனா். அதேபோல சங்ககிரி எஸ்.கே.நகா் பகுதியில் தொழிலதிபா் அன்பழகன் வீட்டில் 9 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

இந்தச் சம்பவங்கள் குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் சங்ககிரி கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தனா்.

இந்த விசாரணையில் பிடிபட்டவா்கள், சேலம், அழகாபுரம், பெரியபுதூா், பிடாரி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராஜசேகா் (39), தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, ஊமத்தப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னராமன் மகன் மணிகண்டன் (29) என்பதும், இருவரும் வைகுந்தம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து 6 பவுன் நகை, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். இவ்வழக்குகளில் ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை மதுரையைச் சோ்ந்த சுரேஷை (32) கைது செய்து அவரிடமிருந்து 7 பவுன் நகை, காா், எரிவாயு உருளை, எடை தராசு, ரொக்கம் ரூ. 10 ஆயிரம், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT