தேவூரில் உள்ள அருள்மிகு திம்மராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டம், தேவூரில் உள்ள திம்மராயப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 19-ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து கோபூஜை செய்யப்பட்டது. மாா்ச் 20ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21ஆம் தேதி 2ஆம் கட்ட யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.