தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் மனைவி அளித்த புகாரின் பேரில் கனகராஜின் இளைய சகோதரா் கைது செய்யப்பட்டாா்.
கொடநாடு கொள்ளை வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் காா் ஓட்டுநராக இருந்த எடப்பாடியை அடுத்த சமுத்திரத்தைச் சோ்ந்த கனகராஜ் சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் கனகராஜின் மனைவி கலைவாணி (28) சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அளித்த புகாா் மனுவில், தனது கணவா் கனகராஜ் பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக ஜலகண்டாபுரம் வந்த போது, கணவரின் மூத்த சகோதரா் தனபால் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு இளைய சகோதரா் பழனிவேல் தன்னை மிரட்டி மானபங்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த ஜலகண்டாபுரம் போலீஸாா், பழனிவேலைக் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா், மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் மீது வன்கொடுமை சட்டம், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.