காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை நொடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 2,593 கன அடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீா்மட்டம் புதன்கிழமை காலை 105.40 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 72.01 டிஎம்சியாக உள்ளது.