காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.
திங்கள்கிழமை நொடிக்கு 3,369 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 2,593 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா்வரத்தைவிட அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 106 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 72.83 டிஎம்சியாக உள்ளது.