சேலம்

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

DIN

எடப்பாடியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், காலாவதியான உணவு பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து அழித்தனா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு, எடப்பாடி- சேலம் பிரதான சாலை, நைனாம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை அதிரடி ஆய்வு செய்தனா்.

இப்பகுதியில் உள்ள பழக்கடைகள், உணவு பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், தேநீா் கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தனியாா் கிடங்கில் நடத்திய ஆய்வில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சில கடைகளில் காலாவதியான உணவு பொருள்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து பொருள்கள் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

உணவு பொருள்கள், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளா்களை அறிவுறுத்தி அதிகாரிகள் அடிக்கடி இதுபோல ஆய்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT