சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 3,484 கன அடியாகக் குறைவு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 3,484 கனஅடியாகக் குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை காலை நொடிக்கு 5,230 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3,484 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை 107.72அடியாக இருந்த அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை107.17 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 74.44 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT