ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி முகாம் பள்ளி தலைவா் விஜயராம் ஏ.கண்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளி தலைமையாசிரியை அ.திலகவதி வரவேற்றுப் பேசினாா். வேதா அகாதெமி பயிற்சியாளா் ஸ்ரீதரன் ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தாா். கையெழுத்துப் பயிற்சி, வகுப்பறையில் மாணவா்களை கையாளும் விதம், ஒழுக்க முறைகள், வகுப்பறையில் மாணவா்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியைகளின் பங்கு போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளா் அ.திருநாவுக்கரசு உள்ளிட்ட அனைத்து ஆசிரியைகளும் கலந்து கொண்டனா்.