தம்மம்பட்டி பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பால், தயிா், சந்தனம், அரிசி மாவு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து நந்திக்கு புல், மலா்கள் சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தா்கள் தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடினா். இவ்விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல கெங்கவல்லி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலிலுள்ள சிவாலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் வீரகனூா் , தெடாவூா், செந்தாரப்பட்டி, தகரப்புதூா், கூடமலையிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா பக்தா்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.