சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,195 கன அடியாகச் சரிவு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,195 கன அடியாகச் சரிந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 5,507 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை 5,195 கன அடியாகக் குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை காலை 108.60 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 108.16 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 75.82 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT