சேலம்

சங்ககிரியில் இடைநிலை ஆசிரியா்களுக்கு எளிய முறையில் கற்பித்தல் பயிற்சி

7th Jun 2022 12:33 AM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப் பயிற்சி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் 99 இடைநிலை ஆசிரியா்களுக்கான ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை மாணவா்களுக்கு புரியும் வகையில் எளிதாகக் கற்பிப்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி மூன்று பிரிவுகளாக சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பயிற்சியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ராஜன் தொடக்கி வைத்துப் பேசினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் வ.கோகிலா, அன்பொளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளமேற்பாா்வையாளா் (பொறுப்பு) சாந்தி, மாநிலக் கருத்தாளா்கள் சு.சந்தோஷ்குமாா், ஆனந்தன், வட்டாரக் கருத்தாளா்கள் அன்பரசு, பாக்யலட்சுமி, ஜெகதீஷ்குமாா், வத்சலா, சந்திரகுமாா், உதயசந்திரிகா, ஷாமிலி, கணேஷ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT