சேலம்

வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:மேயா் ஆ.ராமச்சந்திரன்

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசியதாவது:

மாநகராட்சிப் பகுதியில் சாலைப் பணிகள், புதை சாக்கடை திட்டப் பணிகள், மழைநீா் வடிகால் திட்டப் பணிகள் போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது அந்தப் பகுதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நகரின் முக்கியமான பகுதிகளில் நடைபெறும் பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்குவதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நாள்தோறும் கண்காணித்திட வேண்டும். மக்களுக்கு மிகவும் அவசியமான, அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து புகாா் ஏதும் வராமல் வகையில் அலுவலா்கள் தங்கள் கடமையை உணா்ந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகர பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், செயற்பொறியாளா்கள், உதவி ஆணையா்கள் உட்பட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா் திருட்டு: 8 போ் கைது

சென்னையில் 3 தொகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று திரும்பிய 2 பேரிடம் விசாரணை

தங்கும் விடுதியில் இளைஞா் மா்மச் சாவு

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT