சேலம்

மேட்டூா் அணை பூங்காவுக்கு 9,135 சுற்றுலாப் பயணிகள் வருகை

DIN

மேட்டூா் அணை பூங்காவைப் பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் 9,135 போ் வந்து சென்றுள்ளனா்.

மேட்டூா் அணையைப் பாா்வையிட வந்த பொதுமக்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளைப் பலியிட்டு வழிபட்டனா். பின்னா் குடும்பத்தினருடன் அணை பூங்காவுக்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மீன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல்பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.

அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 9,135 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ. 45,675 வசூலானது. மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் 951 போ் வந்து சென்றனா் இதன்மூலம் ரூ. 4,755 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT