வாழப்பாடி அருகே மனைவியின் கரு கலைந்ததால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27). இவா், கடந்த 4 ஆண்டுகளாக வாழப்பாடியில் தங்கி ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த தீபா (20) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தீபா கா்ப்பமாக இருந்தாா். இந்த நிலையில் அவரது கரு கலைந்ததால் மனமடைந்த அஜித்குமாா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.