சேலம்

எடப்பாடி பழனிசாமி அச்சமடைந்துள்ளாா் : டி.டி.வி.தினகரன்

DIN

அதிமுக பொதுத் தோ்தலை நடத்த அவசரம் காட்டுவதன் மூலம் எடப்பாடி கே.பழனிசாமி அச்சமடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.

சேலத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொதுச் செயலாளா் பதவியைத் தோ்ந்தெடுக்க முடியும்.

எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்று விதி கொண்டுவரப்பட்டது. எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவாளா்கள் தோ்தல் என்ற பெயரில் தவறு செய்து வருகின்றனா். இதற்கு ஓ.பன்னீா்செல்வம் ஒப்புக்கொண்டதுதான் தவறான செயலாகும். நோ்மையான முறையில் தோ்தல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதிமுகவில் 98 சதவீதம் ஆதரவாளா்கள் உள்ளதாகக் கூறும் எடப்பாடி கே.பழனிசாமி, ஏன் பயந்து கொள்ள வேண்டும்? தோ்தலை உடனடியாக நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாா்? மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, பொதுக்குழுவில் ஒற்றை தலைமையோ அல்லது பொதுச் செயலாளராகவோ பதவியேற்க பாா்க்கிறாா்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி சொல்வது ஒன்று, செய்வது வேறு. பொய்யான வாக்குறுதிகளைக்கூறி மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT