சேலம்

எடப்பாடி அருகே மாமியாரை கொலை செய்து மருமகள் தற்கொலை

DIN

எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்துக் கொன்ற மருமகள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தானமூா்த்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்லப்பன் மனைவி தைலம்மாள் (75). இவா்களுக்கு 3 மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில், தைலம்மாளின் மூன்றாவது மகனான மெய்வேல் தனது மனைவி செல்வி (45) மற்றும் குடும்பத்தினருடன் தனது தாயாரின் வீட்டின் அருகே குடியிருந்து வருகிறாா்.

ஓட்டுநரான மெய்வேல் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் தைலம்மாள் வீட்டருகே பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். ஆனால், தைலம்மாள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்த போது, அவரது மனைவி செல்வி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கொங்கணாபுரம் போலீஸாா், செல்வியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

குடிநீா் பிடிப்பதில் தைலம்மாளுக்கும் அவரது மருமகள் செல்விக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் மாமியாரைக் கட்டையால் தாக்கி கொலை செய்த செல்வி வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT