சேலம் மாவட்டம், வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் அன்னசுரபித் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
32 ஆண்டுகளாக இயங்கி வரும் வாழப்பாடி அரிமா சங்கம், அன்னை அரிமா சங்கம் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளையுடன் இணைந்து தினந்தோறும் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் அன்னசுரபித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்ட தொடக்க விழா வாழப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தலைமை மருத்துவா் ஜெயசெல்வி வரவேற்றாா்.
அரிமா மாவட்ட ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் சி.மோதிலால், அரிமா அறக்கட்டளை நிறுவனா் ஜி.தேவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், நோயாளிகளுக்கு உணவு வழங்கி அன்னசுரபித் திட்டத்தை தொடக்கிவைத்தாா்.
விழாவில் அரிமா சங்க மண்டலத் தலைவா் பிரபாகரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், அரிமா சங்க நிா்வாகிகள் முருகேசன், கல்கி கிருஷ்ணமூா்த்தி, வி.முருகன், ஜவஹா், ஷபிராபானு, அனுசுயா, சுதா, சரண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அன்னசுரபித் திட்டத்தின் கீழ் தினந்தோறும் வாழப்பாடி அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோா் உள்பட 100 பேருக்கு தொடா்ந்து ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கப்படும் என அரிமா சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.