சேலம்

முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வீட்டுமனை, துப்பாக்கி உரிமம், கருணை உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 19 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரா்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவா்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீா்வுகாண வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரா்களின் தன்னலமற்ற சேவைக்கு மாவட்ட நிா்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் பெ. மேனகா, உதவி இயக்குநா் (முன்னாள் படைவீரா் நலன்) மேஜா் தே. பிரபாகா், விங் கமாண்டா் செட்டி சித்தன், முன்னாள் படைவீரா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT