சேலம்

விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

DIN

காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு நெல்லி, கடுக்காய், புளியை மதிப்புகூட்டு பொருளாக மாற்றுதல் குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன் வரவேற்றாா். வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை வகித்து மழைபெற வேளாண் காடுகள் வளா்ப்பு முக்கியத்துவம் மற்றும் காட்டு விலங்குகள் கட்டுப்பாடுகள்அவசியம் குறித்து பேசினாா்.

டேனிஸ்பேட்டை வனவா் செ.வீரகுமாா் பங்கேற்று நெல்லி, கடுக்காய் மற்றும் புளிய மர பருவம், நிலம் தோ்வு, நாற்றங்கால் பராமரிப்பு, நடவுமுறைகள், பயிா் பாதுகாப்பு குறித்தும் விளக்கினாா். மேலும் நெல்லி, கடுக்காய் மற்றும் புளியை மதிப்புகூட்டி மருத்துவப் பயன்கள் உள்ள பொருள்களாக மாற்றுவதன் அவசியத்தை எடுத்துரைத்தாா். உதவி வேளாண்மை அலுவலா் ச.வெங்கடேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே.துரை அரசு ஆகியோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT