சேலம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று மாலை 6.00 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த ஜூன் 12-ல் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெய்த பருவமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி உபரி நீராக 79.50 டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி முதல் இன்றுவரை 129 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து 167.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்துவந்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு 237 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இன்று மாலை 6.00 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் செய்யப்பட்டு வந்த மின் உற்பத்தி 6.00 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 792கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 76.35 டி.எம்.சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT