வீரகனூா் காவல்நிலையத்தில் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல்நிலையத்தில் ஏற்கனவே, தலைமைக்காவலா்கள் இரண்டு போ், முதல்நிலைக்காவலா் ஒருவா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மேலும் ஒரு தலைமைக்காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீரகனூா் காவல்நிலையம் முழுவதும்,கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பாதிக்கப்பட்டவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.