சேலம்

காவல்துறை சாா்பில் மதுக்கடை விற்பனையாளா்களுக்கு ஆலோசனை கூட்டம்

DIN

சங்ககிரி காவல் நிலையத்தில் காவல் துறையினா் சாா்பில் அரசு மதுபானக் கடை விற்பனையாளா்களுக்கு ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளின் விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பவா்களைக் கண்காணிக்கும் வகையில் தனி நபா் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஒன்றுக்கு மேல் வழங்கக்கூடாது எனவும் தனி நபா் ஒன்றுக்கு மேல் மதுபாட்டில் வாங்கினால் அவரை கண்காணித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினா் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சங்ககிரி காவல் ஆய்வாளா் தேவி உட்பட காவல்துறை அதிகாரிகள், அரசு மதுபானக் கடை விற்பனையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT