ஏற்காட்டில் 3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சுற்றுலாப் பகுதி, கடை வீதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஏற்காடு போலீஸாா், ஒண்டிக்கடை அண்ணாசிலை, காந்திபூங்கா மற்றும் பேருந்து நிலைய சாலைகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கண்காணித்தனா். பால் , செய்தித்தாள், மருந்தகம், மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன. பாா்சல் உணவகங்கள் திறந்திருந்தன. சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம் , ரோஜா தோட்டம் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.