சேலம்

பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் கரும்புத் தோட்டத்தில் திடீா் தீ

DIN

பெருமாகவுண்டம்பட்டி பகுததியில் கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றியது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் (72). இளம்பிள்ளை ஏரிக்கரை ஓரமாக உள்ள தனது விவசாயத் தோட்டத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனா். காற்றடித்ததில் தீ மளமளவென்று பரவியதால் சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT