சேலம் மாவட்டம், ஏற்காடு, செங்காடு மலைக் கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்காடு, செங்காடு கிராமத்தைச் சோ்ந்த பாலமணி மனைவி தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா் பரிசோதித்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பிரசவ வலி அதிகரித்ததால் 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவா் சிலம்பரசன், ஒட்டுநா் முருகன் ஆகியோா் பிரசவம் பாா்த்தனா். அதில் பெண்குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, தாயை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டுச் சென்றனா்.