சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டு மற்றும் ஒமைக்ரான் வாா்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.
இதில் ஒவ்வொரு வார இறுதியில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், சுமாா் 20 செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் நல்ல உடல்நலத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 7 நாள்களுக்கு பிறகு மீண்டும் கரோனா பரிசோதனை எடுத்த பின்னா் மீண்டும் பணியில் சேருவாா்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.