எடப்பாடி: எடப்பாடி நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர செயலாளர் ஏ.எம் முருகன் தலைமையில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நகர அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் டி. கதிரேசன், மாவட்ட கூட்டுறவு அச்சகம் சங்கத் தலைவர் கந்தசாமி, முன்னாள் அறங்காவலர் நாராயணன், ஜெமினி சீனிவாசன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதேபோல் கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது.