மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 5,400 கனஅடியாகச் சரிந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த ஆறு நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,600 கனஅடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,400 கனஅடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 5000 கனஅடி வீதம் நீா் மின் நிலையங்கள் வழியாகவும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.