சேலம்

நியாயவிலைக் கடை விற்பனையாளா், கட்டுநா் பணி

DIN

கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடை விற்பனையாளா், கட்டுநா் பணியிடத்துக்கு வரும் டிச. 15-ஆம் தேதி தொடங்கி டிச. 29-ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிச. 15 முதல் டிச. 29 வரை நடைபெறவுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமை கோரல்:

மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரா்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக, தமிழக அரசின் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நோ்முகத் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு குழுவிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT