எடப்பாடி நகர காங்கிரஸ் சாா்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
எடப்பாடி நகரத் தலைவா் நாகராஜ் தலைமையில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் கட்சிக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸாா், எடப்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு பரிசளித்தனா். மேலும், உள்நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்ட உணவுகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் எடப்பாடி நகா்மன்ற துணைத் தலைவா் ராதா, சங்கா் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.