வாழப்பாடி அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த சேலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (40). இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், கிஷோா், சரண் ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.
சேலத்திலுள்ள எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து விரக்தியில் இருந்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாழப்பாடி அருகே சேஷன்சாவடி சங்கா் அருகில் வனப்பகுதியில் உள்ள பஞ்சுமாயிம்மன் கோயில் கூரையில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், இவரது பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.