சேலம்

ஜெயலலிதா நினைவு நாள்: சேலத்தில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்

DIN

ஆத்தூரில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மௌன ஊர்வலம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. 

ஆத்தூர் நகர கழக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி தாயுமானவர் தெரு வழியாக சென்று கோட்டையில் உள்ள ஜெயலலிதாவின் திரவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

இதில் ஆத்தூர் நகர செயலாளர் அ.மோகன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.ஜெயசங்கரன், அ.நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவர் ஏ.டி.அர்ச்சுணன், முன்னாள் சட்டப்பேரவ உறுப்பினர்கள் எஸ.மாதேஸ்வரன், ஆர்.எம்.சின்னதம்பி, அ.மருதமுத்து, ஒன்றிய செயலாளர்கள் வி.பி.சேகர், கே.பி.முருகேசன் ரமேஷ், நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT