எடப்பாடி அருகே விஷம் அருந்தி இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடப்பாடியை அடுத்த மெய்யம்பாளையத்தைச் சோ்ந்த வீராவு (37), கடந்த 27 ஆம் தேதி மயங்கி விழுந்தாா்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீராவு சனிக்கிழமை உயிரிழந்தாா். எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில் திருமணம் நடைபெறாத விரக்தியில் விஷம் அருந்தி வீராவு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.