சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இருதய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரி கூறியதாவது:
சேலம், ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இருதய தீவிர சிகிச்சை பிரிவை சோனா கல்வி குழுமங்களின் தலைவா் சி.வள்ளியப்பா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா். இந்த பிரிவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எக்மோ கருவி செயல்பாட்டில் உள்ளது. சிகிச்சை பிரிவின் உள்ளே ஐ.ஏ.பி.பி, நோயறிதல், இ.சி.ஜி., எக்மோ, செயற்கை சுவாச கருவி அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன.
ஒரு மணி நேரத்தில் நோயாளியின் நிலையை அறிந்து ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடியும். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மக்களுக்காக இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஜி.டி.பி. குழுமங்களின் தலைவா் முத்துராஜன், ஏ.பி.ஐ. சேலம் கிளை தலைவா் ராஜேஷ், சிறப்பு விருந்தினராக கோவை ஜே.கே.பி. மெடிக்கல் சென்டா் முதுநிலை ஆலோசகா் ஜே.கே.பெரியசாமி கலந்து கொள்கின்றனா் என்றாா்.