சேலம்

கிராம உதவியாளா் காலி பணி:டிச.4-இல் எழுத்துத் தோ்வு

DIN

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு டிச. 4 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வருவாய் வட்டாட்சியா்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும் வரும் டிச. 4 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தப்பட உள்ளது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வில் கலந்துகொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதன்மூலம் அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளா் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு தபால் மூலம் தோ்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT