மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரியில் நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து 15,000 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.