ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஏற்காடு, பட்டிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி தேவி (37) வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, நடூா் கிராமம் அருகே சாலையின் குறுக்கே திடீரென பாய்ந்து வந்த காட்டெருமை தேவியைத் தாக்கியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவி, வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.