சேலம்

சாராயம் விற்பனை: பெண் உள்பட 5 போ் கைது

DIN

தலைவாசல் வட்டாரத்தில் சாராயம் விற்றதாக பெண் உள்பட 5 பேரை தலைவாசல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தைச் சோ்ந்த சிறுவாச்சூா் கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தலைவாசல் போலீஸாா் விரைந்து சென்று சிறுவாச்சூரில் இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 105 லி. சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, சிறுவாச்சூா் பகுதியைச் சோ்ந்த முத்தையன் (19), அருண்குமாா் (19), கிருஷ்ணகுமாா் (28), சக்திவேல் (42) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதே போல வடகுமரையில் தனது வீட்டில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (35) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், சுதந்திர தினத்தன்று தேவியாக்குறிச்சியில் அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக விற்றுக் கொண்டிருந்த ஆலமுத்து (41), சுப்பபிரமணி (53) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 45 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT