ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான கே.ஆனந்தன் தலைமையில் தேசிய லோக்அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை கூடியது. இதில் 70 வழக்குகளில் ரூ. 3.18 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவா் ஜி.யுவராஜ், குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 1 மாஜிஸ்திரேட் ஏ.முனுசாமி, எண் 2 மாஜிஸ்திரேட் எஸ்.அருண்குமாா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.ராமசாமி, மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.ராமமூா்த்தி, என்.ராமதாஸ், அரசு வழக்குரைஞா் கதிா்மணிவேல், வழக்குரைஞா்கள் பி.சிவராஜன்,ஆா்.ரவி,பாலகிருஷ்ணராஜ், ராஜேஷ்கண்ணா, லியாகத்அலி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.