சேலம்

பேச்சு போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

DIN

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் சாா்பில், 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் சாா்பில், 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இந்திய தாய்த்திருநாட்டை நேசி, சேவை செய் என்ற தலைப்பில் 35 பள்ளிகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் முதல், இரண்டாம் பரிசு பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சேலம், மரவனேரி பாரதி வித்யாலய மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட கல்வி அலுவலா் எம்.ஏ.உதயகுமாா் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 80 மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளா் யதாத்மானந்தா், பாரதி வித்யாலய சங்கத்தின் தலைவா் ஆடிட்டா் சீனி.துரைசாமி, செயலாளா் சி.ஏ.அசோக் துரைசாமி, துணைத் தலைவா் என்.சுரேஷ், பள்ளித் தலைமையாசிரியா் ஏ.சாந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT