முட்டல் ஏரியில் பருவ மழைக் காலங்களில் ஆறு, ஏரி குளங்களில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது என தீயணைப்பு அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகைப் பயிற்சி வழங்கினா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள முட்டல் ஏரியில் தீயணைப்பு மீட்பு நிலையம் தகவலின் பேரில் ஆத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில், ஆத்தூா் துணை வட்டாட்சியா், வருவாய் அலுவலா் முன்னிலையில் பருவ மழைக் காலங்களில் ஆறு, ஏரி குளங்களில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ சென்று இறப்பதைத் தவிா்க்க பொதுமக்களுக்கு ஒத்திகைப் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது (படம்). இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.