ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் விழாவில் பங்கேற்றாா். வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் ஆா்.பாலசுப்ரமணியம், எல்.என்.வி.கிருஷ்ணன், பி.சரவணன், ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், எம்.விஜயன், கே.பி.மகாலிங்கம், ஏ.லோகநாதன்,ஜி.பாண்டியன், ஏ.ராஜகணபதி ஆகியோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். ஆலய அா்ச்சகா்கள் உ.சுந்தரேச குருக்கள், உ.காா்த்திகேய குருக்கள் ஆகியோா் சிறப்பு வழிபாடுகளை நடத்தினா்.