சேலம்

நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் அஞ்சல் வழி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாளா்களுக்கான அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக. 12-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக. 17-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பித்திட வேண்டும். சோ்க்கைக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தரப் பணியாளா்களும் வயது வரம்பின்றி இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆவா். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 15,050 ஆகும். அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள் தவிர தனியாா் விண்ணப்பதாரா்களுக்கு அனுமதியில்லை.

இப்பயிற்சியில் சேருபவா்கள் சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை (516, கடலூா் பிரதான சாலை, காமராஜா் காலனி, அம்மாபேட்டை, சேலம்-14) நேரில் அணுகியோ அல்லது 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT