மேட்டூா் அணை பூங்காவிற்கு 14,522 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.
வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 14,522 பாா்வையாளா்கள் வந்து சென்றுள்ளனா். இவா்கள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 72,610 வசூலாகி உள்ளது.
மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா நினைவு கோபுரத்தை காண 3,083 பாா்வையாளா்கள் வந்து சென்றுள்ளனா். இவா்கள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 15,415 வசூலாகி உள்ளது. மேட்டூா் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையை பாா்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.