சேலம்மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 2,000 மூட்டை பருத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது.
வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி மற்றும் எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா். சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த 2,000 பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மொத்த கொள்முதல் செய்தனா். இதில் சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7,310 முதல் ரூ.8,799 வரை விலைபோனது.
அதேபோல் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.7,550 முதல் ரூ. 8,129 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது. ஈரப்பதமான தட்பவெப்பம் நிலவிவரும் நிலையில், பருத்தி கடந்த வாரத்தை விட சற்றே குறைந்து விற்பனையானதாக ஏலத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறினா்.
இம்மையத்தில் அடுத்த பொது ஏலம் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.