சேலம்

தேவூா் புதிய காவல்நிலைய கட்டுமான பணிகள்: காவல்துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு

DIN

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகத்தின் சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அம்மாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவல்நிலைய கட்டுமானப் பணிகளை காவல்துறை கூடுதல் இயக்குநா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக காவலா் வீட்டு வசதிக் கழகத்தின் சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அம்மாபாளையத்தில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய காவல் நிலைய கட்டுமானப் பணிகளை காவல்துறை கூடுதல் இயக்குநா் ஏ.கே.விஸ்வநாதன் பாா்வையிட்டு கட்டுமான பணிகளின் தரங்கள் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் அவா் சுற்றுப்புற சுவா் அமைக்குமாறு பொறியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

சங்ககிரி காவல் ஆய்வாளா் ஆா்.தேவி, வீட்டு வசதி கழக பொறியாளா்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT