சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அக். 18-ஆம் தேதி வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும். இதில், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.