எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து, தம்மம்பட்டி, கெங்கவல்லி பேரூராட்சிகளில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டி நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் திருச்செல்வன் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் துணை பொதுச்செயலாளா் டாக்டா் செழியன், சேலம் கிழக்கு மாவட்ட தலைவா் அா்த்தனாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸாா் பங்கேற்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
கெங்கவல்லியில் நகர காங்கிரஸ் தலைவா் சிவாஜி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தெடாவூா் நகர காங்கிரஸ் தலைவா் சசிகுமாா், தங்கவேல், முன்னாள் தலைவா் முகமது செரீப், முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் அா்த்தனாரி பங்கேற்று பேசினாா்.